
janani
Mar 21, 2026
உலகம்
ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஈரான்

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான கடற்படைத் தளமாகக் கருதப்படும், சாகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) தளம் மீது ஈரான் இரண்டு நடுத்தர தூர பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இராணுவத் தளம் மீது தொடுக்கப்பட்ட இத்தாக்குதலால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணைகளில் ஒன்று வான்பரப்பிலேயே அழிந்துள்ளதாகவும், மற்றைய ஏவுகணையை அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று தாக்கி முறியடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





