Search

admin

Apr 17, 2026

உள்ளூர்

இந்தியத் துணை ஜனாதிபதி முதல் முறையாக இரு நாள் இலங்கைப் பயணம்


இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் 2026 ஏப்ரல் 19-20 தேதிகளில் ஜனநாயக சோசலிசக் குடியரசான இலங்கைக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்வார்.என இலங்கை இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது

இலங்கை இந்திய தூதரகம் இன்று (17) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது


இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும். இந்த பயணத்தின் போது இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவைச் சந்திப்பார். அதனை தொடர்ந்து பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் மற்றும் புலம்பெயர் இந்தியத் தலைவர்களையும் சந்திப்பார்.

அதேவேளை  இந்தியாவின் மகாசாகர் தொலைநோக்குப் பார்வை மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமைக் கொள்கை ஆகியவற்றில் இலங்கை ஒரு முக்கியப் பங்காளியாக விளங்குகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து பிரதி ஜனாதிபதி அவர்களின் இலங்கை பயணம் அமைந்துள்ளதுடன்   இந்தியாவையும் இலங்கையையும் பிணைக்கும் பல்லாயிரம் ஆண்டு கால பழமையான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் டின அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All