Search

sath

Mar 18, 2026

உலகம்

இஸ்ரேல் நிலைமை குறித்து தூதுவர் விடுத்த முக்கிய தகவல்

இஸ்ரேலில் இருந்து வெளியேறிய பணியாளர்களின் விசா 2026 ஏப்ரல் 30 வரை நீடிப்பு – தூதுவர் நிமல் பண்டார அறிவிப்பு


இந்தத் தீர்மானத்தின்படி, 2026 பெப்ரவரி 28 முதல் ஏப்ரல் 21 வரையான காலப்பகுதிக்குள் காலாவதியான அல்லது காலாவதியாகவுள்ள மீள்-நுழைவு விசாக்கள் தானாகவே ஏப்ரல் 30 வரை நீடிக்கப்படும் என்பதுடன், இதற்காகத் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதுப்பிக்கப்பட்ட விசா செல்லுபடியாகும் காலம் இஸ்ரேலின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரசபையின் அமைப்பில் தோன்றும் என்பதுடன், அந்த காலப்பகுதிக்குள் எல்லைகளின் ஊடாக மீண்டும் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதேவேளை, ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் ஈரான் ஆகியன இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார தெரிவித்துள்ளார். 

 

குறிப்பாக இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளில் உள்ள பொருளாதார மற்றும் இராணுவ இலக்குகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

 

அதன்படி, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், அபாய எச்சரிக்கை சத்தம் கேட்கும் சந்தர்ப்பங்களில் அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளனர். 

 

பாதுகாப்பான இடங்கள் இல்லாத பட்சத்தில், பலமான சுவர்களைக் கொண்ட இடங்களில் தஞ்சம் புகுவதும், கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்களிலிருந்து தூர விலகி இருப்பதும் அவசியமானது எனவும் மேலதிகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All