
janani
Apr 29, 2026
உலகம்
போர் பதற்றம் தாக்கம் : உலகளவில் எரிசக்தி விலைகள் மேலும் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்கள் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று மேலும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், அதன் விலையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 100.3 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 111.7 அமெரிக்க டொலராக நிலவுகிறது.இதேவேளை, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.அதன்படி, அதன் விலை 2.559 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





