Search

Rebecca

Mar 4, 2026

உள்ளூர்

புல்மோடை நகரில் சட்டவிரோத டீசல் விற்பனை: 390 லீட்டர் டீசலுடன் ஒருவர் கைது!

புல்மோடை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், அனுமதிப்பத்திரம் இன்றி டீசல் கையிருப்புகளைச் சேமித்து வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்மோடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (03) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 390 லீட்டர் டீசல் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புல்மோடை, அர்பத் நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (04) குச்சவெளி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், புல்மோடை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All