Rebecca
Dec 11, 2025
உள்ளூர்
அதிவேக வீதியில் குப்பைகளை கொட்டியவர் கைது
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பைகளை விட்டுச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதுவ நுழைவாயில் கட்டுப்பாட்டு உப பொலிஸ் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
வாகனத்தின் சாரதி ஒருவர் அதிவேக வீதியில் குப்பைகளை விட்டுச் சென்றதை அவதானித்த பொலிஸார் அவரை பின்தொடர்ந்து சென்று கைது செய்துள்ளனர்.
35 வயதான குறித்த நபர் சீதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All







