
admin
Jun 19, 2026
உள்ளூர்
லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் கைது!

லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சலாகே குணரத்ன இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையான கொள்முதல் செயன்முறையின்றி,விடுக்கப்பட்ட மீள் கொள்வனவு ஒன்றின் மூலம் ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்திற்கு பொதியிடல் உறைகளைப் பெற்றுக்கொண்டதன் ஊடாக, அரசாங்கத்திற்கு சுமார் ஒரு கோடியே நாற்பத்து மூன்று இலட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பிரதான விநியோகஸ்தர் நிறுவனம் அநியாயமான முறையில் இலாபம் ஈட்டுவதற்கு வழிவகுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியே அவர் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





