Search

janani

Mar 20, 2026

உள்ளூர்

தனியார் பேருந்துகள் எரிபொருள் வழங்கல் : புதிய நடைமுறை

நாடு முழுவதும் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சுஜீவ கனகரத்ன அறிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தை சீரமைக்கவும், பொதுப் போக்குவரத்து சேவைகளை தடையின்றி முன்னெடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 107 டிப்போக்களில், 103 டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் மூலம் நாடு தழுவிய ரீதியில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.இந்த புதிய முறையின் கீழ் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள பேருந்துகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது வாகனங்களின் பதிவு நிலையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அல்லது அந்தந்த மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைகளுடன் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தகுதியுள்ள பேருந்து உரிமையாளர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட அல்லது அருகிலுள்ள டிப்போக்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நடைமுறையானது தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் தனியார் போக்குவரத்து சேவைகளை மிகவும் சுமூகமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All