Search

Rebecca

Dec 19, 2025

உள்ளூர்

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (19) காலை 08.00 மணி முதல் நாளை (20) காலை 08.00 மணி வரை அமுலில் இருக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு நிலை 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பதுளை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு நிலை 2 எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All