Search

admin

Jun 13, 2026

உள்ளூர்

அச்சுவேலி தரவை பகுதியில் தீ விபத்து!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் குப்பைக்கு மூட்டிய தீ , அருகில் உள்ள புற்தரைகள் ஊடாக பரவியமையால் , பல ஏக்கர் புற்தரைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

அச்சுவேலி பகுதியில் காணப்படும் தரவை பகுதியில் காணப்பட்ட குப்பைக்கு இனம் தெரியாத நபர்கள் தீ மூட்டியதில் , கடும் காற்று காரணமாக தீ , தரவை பகுதியில் உள்ள புற்தரைகள் ஊடாக வேகமாக பரவியது.

அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மற்றும் மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு ஊரவர்கள் அறிவித்ததை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் , தீயணைப்பு பிரிவினர் மற்றும் ஊரவர்கள் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ குடியிருப்பு பகுதிக்குள் பரவ முதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டமையால் ,பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக ஊரவர்கள் தெரிவித்தனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All