Search

Rebecca

Dec 14, 2025

உள்ளூர்

கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் தலைவர் வெளியிட்டுள்ள தகவல்

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் அதன் பின்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிழக்கு மாகாணத்தில் 35,000 ஹெக்டேர்க்கும் மேற்பட்ட விழை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் தலைவர் ரிணோஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்டத்தில் 21136 ஹெக்டேர் நிலப்பரப்பானது முற்றாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

குறித்த பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான இளப்பீட்டு தொகையான 150,000 ரூபா அவற்றினை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் மாவட்ட விவசாயத் திணைக்களம், ஆகியவை முன்னெடுத்து வருவதுடன் அவை நாளை முதல் விவசாயிகளது வங்கிக்கணக்கில் நேரடியாக இடப்படும் எனவும் தெரிவித்தார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All