Search

Rebecca

Jan 11, 2026

உள்ளூர்

ட்ரோன் விமானங்கள் தொடர்பில் வெளியான தகவல்

ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல குறிப்பிடுகையில், வணிக ரீதியான பெறுமதி கொண்ட அனைத்து ட்ரோன் விமானங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்: "சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இவை முறையாக வானில் பறக்கவிடப்படுவதற்கான ஒழுங்குவிதிகளை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த ஆண்டிலிருந்து அவற்றை அமுல்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.

உண்மையில், இதில் எடை அடிப்படையில் பல வகைகள் உள்ளன. 250 கிராம் முதல் 25 கிலோகிராம் வரையிலான ட்ரோன்கள் இதில் அடங்கும். 250 கிராமிற்கும் குறைவான எடையுடைய 'விளையாட்டுப் பொருள்' வகையைச் சேர்ந்த ட்ரோன்களை நாம் ஒழுங்குபடுத்தப் போவதில்லை.

ஆனால், 250 கிராமிற்கு மேற்பட்ட அல்லது வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்களை நாம் கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்காக எவ்வித சிக்கலும் இல்லை. அவற்றை இறக்குமதி செய்வதற்கும் தனியான ஒழுங்குவிதிகள் காணப்படுகின்றன, அதற்கமையச் செயற்பட முடியும்." என குறிப்பிட்டார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All