
janani
Jun 18, 2026
உலகம்
: ஈரானுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!

மேற்காசியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போர் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் தரப்பு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டிற்குப் பிறகு, வெர்சாய்ஸ் அரண்மனையில் நடைபெற்ற நிகழ்வில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் முன்னிலையில் இந்த உடன்படிக்கையில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
லெபனான் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் ராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படுகின்றன.இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதோடு, கப்பல் போக்குவரத்து மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் தடையின்றி நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பு அளவைக் குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்த விரிவான பேச்சுவார்த்தைகளுக்காக 60 நாள் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான சில எண்ணெய் மற்றும் வங்கித் துறை தடைகளை நீக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த போர்ச் சூழல் முடிவுக்கு வருவதோடு, உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவிய நிச்சயமற்ற தன்மையும் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





