Search

janani

May 1, 2026

உள்ளூர்

மருந்து விநியோகத்தில் இடையூறு: அத்தியாவசிய மருந்துகள் கடும் தட்டுப்பாடு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்து விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக, அத்தியாவசிய மருந்துகளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ தொழிற்சங்கப் பிரதிநிதியொருவர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவிக்கையில்,

ரூபாவின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் காரணமாக வெளிநாட்டு மருந்து விநியோகஸ்தர்களால் முறையான விநியோக முறையைப் பேண முடியவில்லை எனத் தெரிவித்தார்.

இந்த மருந்துத் தட்டுப்பாடு காரணமாக புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்கள் மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சைப் பெறுபவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All