Search

Rebecca

Dec 5, 2025

உள்ளூர்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்துறைகளுக்கான தரவு சமர்ப்பிப்பு

‘திட்வா’ சூறாவளியால் அனர்த்தத்திற்குள்ளான தொழில்துறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அத்துறைகள் தொடர்பான தரவுகளை டிசம்பர் மாதம் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்குப் முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று கைத்தொழில் அமைச்சு (Ministry of Industry) தெரிவித்துள்ளது.

தரவுகளை உள்ளிடும் முறை

சம்பந்தப்பட்ட தகவல்களைப் பின்வரும் இணையதளங்கள் மூலம் உள்ளிட முடியும்:

www.industry.gov.lk Clhf

அல்லது https://aid.floodsupport.org/business-impact ஊடாக

அதேபோல, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொழில்துறைகள் குறித்து அறிவிப்பதற்காக “0712666660” என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சேதமடைந்த தொழில்துறையாளர்கள் அனைவரும், குறித்த தரவு அமைப்பிற்குத் தேவையான தகவல்களை முடிந்தவரை விரைவில் வழங்குமாறு அமைச்சு கோரிக்கை விடுக்கிறது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp