Search

janani

May 14, 2026

உள்ளூர்

யோஷித ராஜபக்ச வழக்கு தொடர கொழும்பு மேல் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை முன்னெடுக்க முடியாது என தெரிவித்து அவரது தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதவான் உதேஷ் ரணதுங்க தனது தீர்ப்பில், குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட “சதித்திட்டம்” என்ற வாதத்திற்கு போதுமான அடிப்படை ஆதாரம் இல்லை எனக் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில், யோஷித ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் விசாரிக்க எந்தவிதமான சட்டத் தடையும் இல்லை என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு செல்லும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.






Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All