
Rebecca
Dec 27, 2025
உள்ளூர்
பொரளையில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

பொரளை – மிஹிதுசென் புர பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 490 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 101 கிராம் 400 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் தெமட்டகொட பகுதியை சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






