
admin
Mar 15, 2026
உலகம்
இஸ்பஹான் நகர் மீது தாக்குதல்

ஈரானின் இஸ்பஹான் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொழிற்சாலை ஊழியர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வெப்பமூட்டிகளைத் தயாரிக்கும் சிவில் தொழிற்சாலை ஒன்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து இஸ்பஹான் நகரம் இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகளின் முக்கிய மையமாக மாறியுள்ளது.
நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியமான நகரமான இஸ்பஹானில், இராணுவ மற்றும் சிவில் ஆகிய இரு துறைகளுக்கும் சொந்தமான தொழிற்சாலைகளும், ஈரானின் மிக முக்கியமான பல அணுசக்தி நிலையங்களும் அமைந்துள்ளன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





