Rebecca
Dec 4, 2025
உள்ளூர்
அக்கரபத்தனை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட ஜீவன் தொண்டமான்
அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட ஊட்வளி குரூப் பிரேம்மோர் பிரிவு, எல்ஜின் உள்ளிட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து 'ஊட்வளி குரூப் பிரேம்மோர் பிரிவு, எல்ஜின் உள்ளிட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின்' அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளையும் அவர் வழங்கி வைத்தார். அத்தோடு சேதமடைந்த வீடுகளையும் பார்வையிட்டிருந்தார்.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் நிலவும் கடும் காலநிலை சீர்கேடு காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பலர் தமது வீடுகளையும் உடைமைகளையும் இழந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All







