Search

janani

Mar 23, 2026

உலகம்

ஈராக் மீது வானூர்தி தாக்குதல் !

வடக்கு ஈராக்கிய நகரமான எர்பிலில் உள்ள இஸ்ரேலிய உளவுப்பிரிவான 'மொசாட்' அலுவலகத்தை இலக்கு வைத்து இன்று அதிகாலை ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு 'அஷாப் அல்-கஹ்ஃப்' ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.

தங்களது உத்தியோகபூர்வ டெலிகிராம் (Telegram) செனலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தாக்குதலை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், ஈராக் முழுவதும் பரவியுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களிலிருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறும் அந்த அமைப்பு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All