
Rebecca
Feb 21, 2026
உள்ளூர்
நாகொல்ல பகுதியில் விபத்து : சிறுமி பலி!

கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மூன்று வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நேற்று (20) நண்பகல் எத்கால பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பளை – நாவலப்பிட்டி வீதியின் நாகொல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி 3 வயதுடைய பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எத்கால பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






