Search

admin

Jun 26, 2026

உலகம்

ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது!

ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று (26) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கமானது 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இது டோக்கியோவிற்கு அருகிலுள்ள பகுதிகளை உலுக்கிய போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என ஜப்பானிய அதிகாரிகளும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன. 

ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மதியம் 12:46 மணிக்கு ஏற்பட்டுள்ளது. 

சிபா மாகாணத்தில் சுமார் 50 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் இருந்ததாக உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டதாக உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All