Search

janani

May 2, 2026

உள்ளூர்

இணைய மோசடி வலையில் சிக்கிய 37 சீனர்கள் கைது!

இணையதளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படைப்பிரிவு மற்றும் தலங்கம பொலிஸாரின் ஊழல் ஒழிப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றது.

தலங்கம, கொஸ்வத்தை பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்டபோது, 35 டெஸ்க்டாப் கணினிகள், 37 டேப்லெட் கணினிகள், 147 கைபேசிகள், 100 சிம் அட்டைகள் மற்றும் 2,100 சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

மேலும், குறித்த உபகரணங்களுடன் அந்த வீடு முழுமையாக பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 37 சீனப் பிரஜைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.மேலும், சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.











Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All