Search

sath

Apr 12, 2026

உள்ளூர்

சீதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு

சீதுவை – கொட்டுகொட வீதியின் 3ஆம் கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கொட்டுகொட நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதற்கு எதிரே வந்த லொறி ஒன்றில் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. 

 

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி சீதுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மீகொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

 

விபத்து தொடர்பாக லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All