Search

Rebecca

Jan 15, 2026

உள்ளூர்

“தை பிறந்தால் வழி பிறக்கும்” - உலகம் முழுவதும் பக்திப் பெருக்குடன் பொங்கல் விழா கொண்டாட்டம்!

இந்து மக்களின் மிக முக்கியமான சமயப் பண்டிகைகளில் ஒன்றான தைப்பொங்கல் திருநாள் இன்று (15) கொண்டாடப்படுகிறது.

உலகெங்கிலும் வாழும் இந்துப் பெருமக்கள் மற்றும் இலங்கை வாழ் இந்து சமூகத்தினர் மிகுந்த உற்சாகத்துடனும் பக்திப் பெருக்குடனும் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

தமது வாழ்விற்கு செழிப்பை வழங்கிய சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதே தைப்பொங்கல் பண்டிகையின் சிறப்பம்சமாகும். இதன்போது, அறுவடை செய்யப்பட்ட முதல் நெல்லைக் கொண்டு சமைக்கப்பட்ட பொங்கலை சூரிய பகவானுக்குப் படைப்பதுடன், விவசாயத்திற்குப் பக்கபலமாக இருக்கும் கால்நடைகளுக்கு கௌரவம் செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.

மங்கலப் பானையில் பால் பொங்கி வழிவதைப் போல, அனைவரது வாழ்விலும் சௌபாக்கியம் பெருக வேண்டும் எனப் பிரார்த்திப்பது இப்பண்டிகையின் பிரதான சடங்காகும். மேலும், இந்துக்கள் இத்தினத்தை ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாகவும் கருதி மகிழ்கின்றனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All