Search

janani

May 19, 2026

உள்ளூர்

“தேசிய இராணுவ வெற்றி தினம்” இன்று - ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு!

யுத்த வெற்றியின் 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெறும் “தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வு” இன்று (19) பத்தரமுல்லையில் உள்ள படை வீரர்கள் நினைவிடத்திற்கு முன்பாக ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

நாட்டிற்காக உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூரும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்வில், முப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த படைவீரர்களின் உறவினர்களும் முதன்முறையாக கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த படை வீரர்கள் சேவை அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி. கொஹோன, தேசிய ஒற்றுமையையும் படைவீரர்களின் தியாகத்தையும் நினைவுகூரும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.






Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All