sasi
Dec 24, 2025
உள்ளூர்
யாழ் நகரில் விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு
பாடசாலை மாணவன் உள்ளிட்ட 10 பேர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரினால் யாழ் நகர் பகுதிகளில் நடாத்திய விசேட சுற்றிவளைப்பின் போது, நான்கு பேர் ஐஸ் போதைப் பொருளுடனும், ஐந்து பேர் போதை மாத்திரைகளுடனும், ஒருவர் கேரள கஞ்சாவுடனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டோரில் பாடசாலை மாணவனும் உள்ளடங்குவதாகவும் , கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








