2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!

இந்திய – பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு வந்த 25 ஜெட் விமானங்கள்

உள்ளூர்February 16, 2026 · 6 months முன்1

உலகக்கிண்ண இருபதுக்கு-20 (World T20) தொடரின் கீழ் நேற்று கொழும்பில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் 15 விசேட தனியார் ஜெட் விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்த விமானங்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளிலிருந்து நேற்று முன்தினம் முதல் வருகை தந்திருந்தன.

பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் திரு. ஜே. ஷா (Jay Shah) மற்றும் பல கோடீஸ்வர தொழிலதிபர்களும் இந்த விமானங்களின் மூலம் வருகை தந்திருந்தனர்.

தற்போது அவர்கள் அனைவரும் தாங்கள் வந்த விமானங்களிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.