2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்

கொஸ்கமையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது

உள்ளூர்February 13, 2026 · 6 months முன்1

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாலாவ பகுதியில் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பின்வருவன கைப்பற்றப்பட்டுள்ளன.

முதலாவது சந்தேகநபரிடமிருந்து 700 கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 26,000 ரூபா பணம் மற்றும் 02 கைபேசிகள்.

இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து, 10 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள்.

மூன்றாவது சந்தேகநபரிடமிருந்து ,10 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள்.

கைது செய்யப்பட்டவர்கள் 23, 30 மற்றும் 32 வயதுடைய கொஸ்கம, புவக்பிட்டிய மற்றும் ஹன்வெல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.