2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் பணிப்புறக்கணிப்பு.

உள்ளூர்September 30, 2025 · 11 months முன்0

நாடு முழுவதும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (செப்டம்பர் 30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.

பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளுக்கு அரசாங்கம் இதுவரை தீர்வு காணவில்லை என்று குற்றம்சாட்டிய சங்கத்தின் செயலாளர், சிரேஸ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க, இதுகுறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

அரச பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதாகவும், கடந்த வருடத்தில் பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து 200 பேராசிரியர்கள் விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச கல்வி தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.