2026 August 25, Tuesday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 30°
LIVE
வெளிநாட்டுக்கு முதன் முறையாக விமானத்தில் சென்ற ஆதிவாசி தலைவர்!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் உறுதி!திட்டமிடப்பட்ட குற்றச்செயல் சந்தேக நபர் ‘பஸ் லலித்’ இலங்கைக்கு!கொழும்பு, கம்பஹாவின் பல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தம்!அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலையில் மழைக்கு வாய்ப்பு!பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் வழக்கு – சமிந்தவுக்கு பிணை!சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை நீடிக்க வேண்டாம் – தாயார் கோரிக்கை!“நாட்டை வீழ்ச்சிக்குத் தள்ளியவர்கள் இன்று புதிய வேடத்தில் அரசியல் நடத்துகின்றனர்” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

பல பகுதிகளுக்கு பலத்த காற்று எச்சரிக்கை!

உள்ளூர்August 24, 2026 · 1 day முன்5
பல பகுதிகளுக்கு பலத்த காற்று எச்சரிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.