2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஜூன் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

உள்ளூர்May 30, 2026 · 3 months முன்1

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெல்லிப்பழை மருத்துவமனையின் புற்று நோய்ப்பிரிவு மருத்துவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியக் குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட மருத்துவர்கள் இருவருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.