காயமடைந்தவர்களுக்காக தயார் நிலையில் ஹெலிகொப்டர்கள்

எல்ல, வெல்லவாய பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக தியத்தலாவ விமானப்படையானது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், எம்.ஐ.17 ஹெலிகொப்டரையும், வீரவில விமானப்படை தளத்தில் பெல் 412 ஹெலிகொப்டரையும் விமானப்படை தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களை ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு செல்ல அல்லது தேவையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுவதற்காக இவை தயார் நிலையில் உள்ளதாக விமானப்படை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.