2026 September 4, Friday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் – விசாரணை வளையத்தில் நாமல்!பனிப்பாறை வெள்ளத்திற்குப் பின் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட இருவர்!15 மனுக்களின் விசாரணையை முடித்த உயர்நீதிமன்றம்!ஊழல் எதிர்ப்புத் திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் முக்கிய தீர்மானம் எதிர்பார்ப்பு!பெண்ணிய இயக்கத்தின் முன்னோடி குளோரியா ஸ்டெய்னம் காலமானார்!வறட்சியால் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!பொலிஸாருக்கு புதிய பதவி உயர்வு முறைமை – ஜனாதிபதி!உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலை இன்று குறைகிறது!

15 மனுக்களின் விசாரணையை முடித்த உயர்நீதிமன்றம்!

NEWS ALERTஉள்ளூர்September 4, 2026 · 1 hour முன்2
15 மனுக்களின் விசாரணையை முடித்த உயர்நீதிமன்றம்!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. 

குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது. 

இச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அவை சிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டன. 

இன்று (04) வாய்மூல சமர்ப்பணங்களை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், எழுத்துமூலச் சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு தரப்பினருக்கு உத்தரவிட்டது. 

அதனைத் தொடர்ந்து, இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிர்காலத்தில் அனுப்பி வைப்பதாகவும் நீதியரசர் குழாம் அறிவித்தது. 

குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மீடியா லோ போரம் (Media Law Forum), ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா (Transparency International Sri Lanka) அமைப்பு உள்ளிட்ட 15 தரப்பினர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.