Search

admin

Apr 16, 2026

உள்ளூர்

சுளிபுரத்தில் 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: இளைஞன் கைது

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுளிபுரம் பகுதியில் 11 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (ஏப்ரல் 15) மாலை 5:00 மணியளவில், சுளிபுரம், வேறம் முல்லைப் பகுதியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த 26வயதுடய இளைஞனால் கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு சந்தேக நபரான குறித்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக சிகிச்சைக்காகவும், மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All