Search

janani

Apr 5, 2026

உள்ளூர்

எரிவாயு விலை அதிகரிக்குமா?

ஏப்ரல் மாதத்துக்கான சமையல் எரிவாயு விலை தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இன்று மாலை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன சூரியன் செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குத் தேவையான எரிவாயு கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


அதன்படி, 30,000 மெற்றிக்தொன் எரிவாயு மாலைத்தீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் கூறினார்.

அத்துடன், எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன சூரியன் செய்திப் பிரிவுக்கு சுட்டிக்காட்டினார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All