Search

janani

Mar 30, 2026

உள்ளூர்

நீர்மட்டம் குறைந்தாலும் நீர் கட்டணத்தில் மாற்றமில்லை

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்தாலும், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பிருந்தாலும், நீர் கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை வலியுறுத்துகிறது.

மின்சாரக் கட்டணங்களின் அதிகரிப்பு நீர் கட்டணத்தை நேரடியாகப் பாதிக்காது என்று நீர் வழங்கல் அதிகார சபையின் தலைவர் சந்தன பண்டார சுட்டிக்காட்டுகிறார்.

நீர் கட்டணத் திருத்தம் என்பது ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நடைபெறும் ஒரு கொள்கை என்றும், ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கட்டண மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது நீர் வழங்கல் அதிகார சபையின் தலைவர் கூறினார்.

அதன்படி, நீர் கட்டணங்கள் தொடர்பாக ஏதேனும் மதிப்பீடு செய்யப்பட்டால், அது ஜூன் 30-ஆம் திகதிக்குப் பின்னறே நடைபெறும் என்று கூறியுள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All