Search

admin

Jun 30, 2026

உள்ளூர்

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ!

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

 

இதற்கமைய, இதுவரை கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ரியர் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ வைஸ் அத்மிரால் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டு, இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நியமனம் ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், தற்போதைய கடற்படைத் தளபதி அத்மிரால் காஞ்சன பானகொட அன்றைய தினம் பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All