Search

janani

Apr 26, 2026

உள்ளூர்

வாகன இறக்குமதியில் வரலாறு காணாத மூன்றாவது உச்சம்!

இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி செலவானது, அந்நாட்டு வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


மத்திய வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக நீண்டகாலமாக அமுலிலிருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, 2025 ஜனவரி அளவில் தனிப்பட்ட வாகனங்களுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் முழுமையாக நீக்கப்பட்டன.


இதன் விளைவாக, பல ஆண்டுகளாக தேங்கியிருந்த வாகனங்களுக்கான கேள்வி (Pent-up demand) மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் முன்னேற்றம் காரணமாக இறக்குமதி செலவு சடுதியாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All