Search

janani

Mar 30, 2026

உள்ளூர்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அழிவடையும் மரக்கறிகள்

எரிபொருள் தட்டுப்பாட்டினால் மொத்த வியாபாரிகள் சந்தைக்கு வருகை தர முடியாதமையால் நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் கிலோ கிராம் மரக்கறிகள் மற்றும் பழங்கள் பழுதடைவதாக தேசிய மரக்கறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிமல் ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள 13 விசேட பொருளாதார நிலையங்களுக்கு சுமார் 3 இலட்சம் விவசாயக் குடும்பங்கள் தமது விளைச்சலை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, நேற்று மாத்திரம் சுமார் 20 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் சந்தைக்கு கிடைத்த போதிலும் வியாபாரிகள் வருகை தரதாத காரணத்தினால் போட்டித் தன்மை குறைந்து மரக்கறி விலைகளும் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.




Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All