Search

Rebecca

Dec 15, 2025

உள்ளூர்

மலையக மக்களுக்காக நிவாரணம் வழங்கிய NERO அமைப்பு : கம்பளையில் சாணக்கியன்

கண்டி, கம்பளை பகுதியில் உள்ள கணபதி தோட்டத்தைச் சேர்ந்த மாவத்துற மலை மகள் தமிழ் வித்தியாலயத்தில் பாலர் பாடசாலையில் மற்றும் ஸ்ரீ மஹிந்த விகாரையில் தற்காலிகமாக தங்கியுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு NERO அமைப்பால் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

வெள்ளத்திற்குப் பின்னர் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்எம்.ஏ சுமந்திரன் அவர்களுடன் இரா.சாணக்கியன் குறித்த பகுதிகளைப் பார்வையிட்டிருந்தனர்.

இதன்போது அனைத்தையும் இழந்த குடும்பங்களின் துயரங்களையும் கேட்டறிந்ததோடு, நிவாரண உதவியுடன் மீண்டும் வருவோம் என்று அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு பகுதியாகவே இந்த விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆதரவு என்பது பார்வையிடுவதும் அறிக்கைகள் வெளியிடுவதும் மட்டுமாக இருக்கக் கூடாது. மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயலும் தருணங்களில்இ அந்த உதவி நேரடியாக அவர்களை அடைய வேண்டும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All