Search

Rizi

Oct 3, 2025

உள்ளூர்

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

 

இந்த அறிவிப்பு இன்று (03) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலத்த மின்னலுடன் மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

பலத்த மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp