SEGU
Oct 22, 2025
உள்ளூர்
மட்டுப்படுத்தப்படும் ரயில் சேவை
மலையக ரயில் பாதையில் இன்றும் (22) ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி முதல் கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் பொல்கஹவெல இடையேயான 10 ரயில் பயணங்கள் இன்று காலை இரத்து செய்யப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையக ரயில் பாதையின் இருபுறமும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் இன்று பிற்பகல் வரை ரயில் பயணங்கள் மட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
கொழும்பு கோட்டை முதல் பதுளை இடையே இன்று காலை இயக்கப்படவிருந்த ரயில் சேவை பேராதனை மற்றும் பதுளை இடையே மாத்திரம் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையக ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று மதியம் 12.00 மணி முதல் வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








