Search

Rebecca

Sep 7, 2025

உள்ளூர்

இலங்கை சார்பாக ஜெனீவாவிற்கு விஜத ஹேரத்

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை சுமார் 06.45 மணிக்கு ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நாளை (08) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜெனீவாவில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையேயான சிறப்பு சந்திப்பொன்றும் இங்கு நடைபெற உள்ளது.

வோல்கர் டர்க்கின் இலங்கை விஜயத்திற்குப் பிறகும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழித்தும் நடைபெறும் இந்த மாநாடு, மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக புதிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்களை முன்வைக்க முடியும்.

இந்த ஆண்டு மனித உரிமைகள் அமர்வில் அமைச்சர் விஜித ஹேரத்துடன் கூடுதலாக, வெளியுறவு அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸ{ம் பங்கேற்பார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp