Search

Sep 9, 2025

உள்ளூர்

வழமைக்கு திரும்பிய புகையிரத சேவைகள்

களனிவெளி மார்க்கத்தில் இயங்கும் புகையிரத சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக, களனிவெளி மார்க்கத்தில் இயங்கும் புகையிரத சேவைகள் கொஸ்கம வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் வழமைக்கு திரும்பியுள்ளது.

புகையிரதமானது புவக்பிட்டியவுக்கும், அவிசாவளைக்கும் இடையிலான பகுதியில் வைத்து தடம்புரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All