Search

Rebecca

Sep 7, 2025

உள்ளூர்

அதிவேக பயணம் : பேருந்தின் சாரதிகள் இருவர் கைது

அதிக வேகத்துடன் பயணித்த 2 தனியார் பேருந்துகளின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 2 பேருந்துகளும் கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த வேளை ஒன்றை ஒன்று முந்திச்செல்ல முற்பட்டன. இதன்போது, பேருந்துகளுக்கு பின்னால் பயணித்த உந்துருளியின் சாரதி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த தனியார் பேருந்துகளின் இரண்டு சாரதிகளும் ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரினால் கினிகத்தேன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All