Rebecca
Nov 14, 2025
உள்ளூர்
மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் கைது
மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி - உத்தராகன்த பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு கொம்பனி வீதி ரயில் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஆவார்.
இது தொடர்பில் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








