Rebecca
Nov 11, 2025
உள்ளூர்
பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 693 பேர் கைது
நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் நேற்று 693 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாத்திரம் 31,594 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 693 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றங்கள் தொடர்பாக நேரடியாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆகும்.
288 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும், 178 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டிய 22 பேரும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








