Search

Rebecca

Nov 14, 2025

உள்ளூர்

வெளிநாட்டு பெண்ணிடம் பணத்தைத் திருடிய ஹொட்டல் ஊழியர் கைது

கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒரு உயர்ரக ஹொட்டல் அறையில் தங்கியிருந்த நெதர்லாந்தை சேர்ந்த பெண்ணின் பணப்பையிலிருந்து பணத்தைத் திருடியதற்காக ஹொட்டல் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வெளிநாட்டுப் பெண், ஹோட்டலில் உள்ள சிறப்பு விருந்தினர் அறையில் மற்றொரு பெண்ணுடன் தங்கியிருந்தபோது, ​​அவரது பணப்பையில் இருந்த திர்ஹாம்கள் மற்றும் யூரோக்கள் (உள்ளூர் நாணயத்தில் ரூ. 330,000 ரூபாய் ) காணாமல் போனதாக சுற்றுலாப் பொலிஸாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய கோட்டை காவல் நிலையம், அந்தப் பெண் தங்கியிருந்த ஹொட்டலில் ஒரு ஹோட்டல் ஊழியரைக் கைது செய்துள்ளது.

சந்தேக நபர் கந்தானையைச் சேர்ந்த 41 வயதுடையவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (14) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp