Rebecca
Nov 13, 2025
உள்ளூர்
சட்ட விரோதமான முறையில் தனுஷ்கோடி சென்ற குடும்பஸ்தர் கைது
சட்ட விரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியா எல்லைக்குள் சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இலங்கை மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் சென்றதன் காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








